மதுரை: BREATH ANALIZE மெஷினிடமே வித்தை காட்டிய மதுபோதை ஆசாமி

மதுரை மாநகர் பகுதிகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிவதற்கான வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு மதுரை அழகப்பன் நகர் பகுதியில் போக்குவரத்துக் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதுரை திருப்பரங்குன்றம் பிரதான சாலையில் திருப்பரங்குன்றத்திலிருந்து பழங்காநத்தம் நோக்கிவந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கம்பியை உடைத்தெறிந்தபடி எதிர்புறச் சாலைக்குச் சென்று நின்றது. இதனையடுத்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவல்துறையினர் காரை மீட்டு போக்குவரத்தைச் சரிசெய்தனர். 

பின்னர் காரை ஓட்டிவந்த நபரை அழைத்துவந்து விசாரணை நடத்தியபோது அதீத மதுபோதையில் இருந்த அந்த நபரின் பெயர் சிவா என்பதும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. உஷ். உஷ். இப்படி ஊதுங்க என மதுபோதை ஆசாமியின் கையை பிடித்து ஊதி டிரெயில் காட்டியபோதும் அவர் உறுப்படியாக ஊதவில்லை, அப்போது மதுக்குடிப்பது போல் பிரெத் அனலைசர் மெஷினில் ஜிப் ஜிப்பாய் இழுத்து வித்தை காட்டினார் மதுபோதை ஆசாமி. என்னய்யா பாடா படுத்துறீங்க என்று கூறி மிகப்பெரிய போராட்டத்திற்குப் பின்னர் சற்றே ஊதிய மதுபோதை 550 பாயிண்ட் அளவிற்கு அதீத மதுபோதையில் இருப்பது தெரியவந்த நிலையில் அபராதம் விதித்தோடு விபத்தை ஏற்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி