இதைதொடர்ந்து சிறப்பு எஸ். ஐ. , க்கள், போலீசாரிடம் பணியாற்ற விரும்பும் ஸ்டேஷன் குறித்து கேட்கப்பட்டது. அவர்கள் அளித்த விருப்ப மனு அடிப்படையில் நேற்று (செப்.,30) 520 பேருக்கு விரும்பிய ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் அளித்து எஸ். பி. , உத்தரவிட்டார்.
குறிப்பிட்ட ஸ்டேஷனில் போதிய ஆட்கள் இருந்ததால் சிலருக்கு அருகில் உள்ள ஸ்டேஷன்களுக்கு இடமாறுதல் வழங்கினார். போலீசார் கூறுகையில், ''விரும்பிய வேலையை ஆர்வமுடன் செய்வது போல், விரும்பிய இடங்களில் பணியாற்றும் போது இன்னும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம். குடும்பத்துடனும் போதிய நேரம் செலவிடமுடியும். அலைச்சல் குறையும். மனஅழுத்தமும் நீங்கும்'' என்றனர்.