மதுரை: குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை

மதுரை யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுபதி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ரக்ஷனா (7), ரக்ஷிதா (5) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக தந்தை சேதுபதி இன்று (செப்.,26) காலை கூர்மையான ஆயுதத்தால் இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர் குழந்தைகளின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கும் முயன்ற சேதுபதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி ராஜேஸ்வரிடம் அண்ணா நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையே இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி