இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுத்தேன். அதில், கடந்த 2022-ஆம் ஆண்டு அக்.20-ஆம் தேதிக்குள் ரூ.7 லட்சத்தையும், எஞ்சிய தொகையை 4 தவணைகளாகவும் வங்கியில் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் எனக்கு உத்தரவிட்டது. மொத்தத் தொகையையும் செலுத்திய பிறகும் எனது சொத்து ஆவணங்களை வங்கி நிர்வாகம் திரும்ப தரமறுப்பது ஏற்புடையதல்ல. எனவே, எனது சொத்து ஆவணங்களை வழங்க வங்கி தலைமை மேலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரிடமிருந்து அடமானமாக பெற்ற அனைத்து சொத்து ஆவணங்களையும், தனியார் வங்கியின் தலைமை மேலாளர் நேரில் சென்று வழங்க வேண்டும். மனுதாரரை பழி வாங்கும் நோக்கில் செயல்பட்ட தனியார் வங்கி தலைமை மேலாளர் ஸ்ரீநாத் குமாருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது என்றனர்.