வாடிப்பட்டி: சாலையில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் கச்சைகட்டி ஊராட்சியை சேர்ந்த பெரியார் நகரில் 2வது தெருவில் 2 ஆண்டுகளுக்கு முன் ரூ. 2. 45 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. வடிகால் வசதி செய்து தரவில்லை. ரோட்டை சீராக அமைக்காததால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி விடுகிறது. கால்நடை கழிவுகள் மழைநீருடன் தேங்கி துர்நாற்றமும் வீசுகிறது.

இதனால் இப்பகுதியை கடந்து செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். சீராக அமைக்கப்படாத ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் பல்வேறு பிரச்னைகள் தொடர்கிறது. தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே வடிகால் வசதி ஏற்படுத்துவதுடன், ரோட்டில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி