வாடிப்பட்டி: சுதந்திர போராட்ட வீரர் பிறந்த நாள் கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழ்நாடு முக்குலத்தோர் நல சங்கம் சார்பாக சுதந்திர போராட்ட வீரர் வாலுக்கு வேலி பிறந்தநாள் விழா ஜெமினி பூங்கா முன்பு நேற்று (ஜூன். 10) கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு சங்கத் தலைவர் சார்லஸ் ரங்கசாமி தலைமை தாங்கினார். 

கௌரவ தலைவர் எஸ். டி. எம். செந்தில்குமார். இணை செயலாளர் அனல் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஆதிமுத்துக்குமார் வரவேற்றார். இந்த விழாவில் பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் வாலுக்கு வேலி உருவபடத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கினார். இதில் பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், காங்கிரஸ் வட்டார தலைவர் முருகானந்தம். ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளர் ராஜேஷ் கண்ணா, அதிமுக பேரவை பேரூர் செயலாளர் தனசேகரன். தேமுதிக மாவட்ட துணைசெயலாளர் டாக்டர் பொன் யாழினி, பேரூர் செயலாளர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி