சோழவந்தான்: அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய தவெக நிர்வாகி

மதுரை சோழவந்தானில் அரசுப் பேருந்து ஓட்டுநர் பிரசாத்தை தவெக நிர்வாகி தனுஷ்கோடி கத்தியால் தாக்கிய சம்பவத்தால் நேற்று (மே. 31) இரவு பரபரப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக, 55 அரசு பேருந்துகளை ஓட்டுநர்களும் நடத்துநர்களும் இன்று (ஜூன் 1) மதியம் இயக்காமல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் நலன் கருதி, இன்று இரவுக்குள் தனுஷ்கோடி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என ஓட்டுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி