காலையில் நடந்த விளையாட்டு தின விழாவில், மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மாணவ மாணவிகள் ஒலிம்பிக் சுடர் ஏற்றி பள்ளி வளாகத்தில் கொடியேற்றினர். மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி, பெற்றோருக்கான விளையாட்டு நிகழ்ச்சி என தனித்தனியாக நடந்தது.
இந்நிகழ்வில் முன்னாள் ராணுவ வீரர் சரவணன், முத்துராமலிங்கம் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். ஆசிரியை மனோகரம் நன்றி கூறினார்.