சமயநல்லூர்: குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை

மதுரை மாவட்டம் தேனூர் தச்சம்பத்து நடுத்தெருவை சேர்ந்த மந்திரத்தின் மகன் மூர்த்தி (44) என்பவருக்கு திருமணம் ஆகி 15 வருடம் ஆகிவிட்டது. இருப்பினும் குழந்தைகள் ஏதும் இல்லை. இந்நிலையில் அவரது மனைவியை அவரது பெற்றோர் விட்டுச் சென்றுவிட்டதால் நேற்று முன்தினம்  (ஜூன் 13) மதியம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

இதுகுறித்து அவரது தந்தை நேற்று (ஜூன் 14) சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி