மதுரை மாவட்டத்தில் நாளை, மே 26, செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரவை, ஏ. ஐ. பி. இ. ஏ. குடியிருப்பு, ஆகாஷ் கிளப், வித்யவாகினி அடுக்குமாடி குடியிருப்பு, மங்கையர்க்கரசி கல்லூரி பகுதிகள், சரவணா நகர், சந்தோஷ் நகர், சமயநல்லூர், ஊர்மெச்சிக்குளம், வளர் நகர், பாத்திமா நகர், தேனூர் சாலைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.