மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனையை இன்று (மார்ச். 16) வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், கால்நடைத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.