இதையடுத்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21ஆம் தேதி வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் உத்தரவின்படியும், கல்வித் துறை அமைச்சர் வழிகாட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 07.04.2025 முதல் 17ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்