சோழவந்தான்: கொடியேற்றத்துடன் தொடங்கிய வைகாசி திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நேற்று (ஜூன் 3) இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் கொடியேற்றத்திற்கு முன்பாக சிறப்பு யாகம் நடைபெற்றது. கொடியேற்றத்திற்கான பூஜை பொருட்களுடன் சோழவந்தானின் நான்கு ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. 

கோவிலில் பின்னர் உள்பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பொதுமக்கள் பக்தர்கள் பெண்கள் பக்திபரவசத்தில் சாமி ஆடினார்கள். திருவிழா 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். 

வருகின்ற 10ஆம் தேதி காலை பால்குடம் மாலை அக்னிசட்டியும் 11ஆம் தேதி மாலை 5 மணிஅளவில் மந்தைகளத்தில் பூக்குழியும் 17ஆம் தேதி காலை திருத்தேரோட்ட நிகழ்ச்சியும் 18ம்தேதி இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நேற்று கொடியேற்றியவுடன் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புகட்டி விரதத்தை தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி