மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து கருப்பட்டி கிராமத்திற்குச் சென்ற தனியார் மினி பேருந்து இன்று (நவ. 4) வாடிப்பட்டி பேருந்து நிலையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் முருகேஸ்வரி (60), முத்துச்செல்வன் (24), ஹேமா (40), ராஜேந்திரன் (36), தங்கவேலு (30), ஈஸ்வரி (40) உட்பட சுமார் 40 பயணிகள் காயமடைந்தனர். பலத்த காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.