மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தகுளம் கிராமத்தில் வசிக்கும் ராஜாங்கம் என்பவரின் 17 வயது மகள் நேற்று முன்தினம் (டிச. 20) மாலை 4 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அவரது தந்தை அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் நேற்று (டிச. 21) புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.