சோழவந்தான்: ஜெனகை மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா நடைபெறும். 

இதற்கு முன்பாக பங்குனி மாத அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை சுற்றுப்புற கிராமங்களில் வாழும் பக்தர்களுக்கு திருவிழா நடத்துவதற்கு முன்பாக அறிவிப்பாக மூன்று மாத கொடியேற்று விழா நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான 3 மாத கொடியேற்று விழா நேற்று (மார்ச் 31) இரவு நடைபெற்றது. வானவேடிக்கை மேளதாளத்துடன் சில பக்தர்கள் சாமியாடி வந்தனர். மூன்று மாதக் கொடிக் கம்பத்தை எடுத்துக் கொண்டு கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி வழியாக வைகை ஆற்றுக்குச் சென்று அங்கு மூன்று மாத கம்பத்தை வைத்து பூஜைகள் நடந்தன. 

இதைத் தொடர்ந்து வடக்குரதவீதி, கடைவீதி, மாரியம்மன் சன்னதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். கோவில் முன்பாக உள்ள மூன்று மாத கொடிபீடத்தில் மூன்று மாத கொடி ஏற்றும் விழா நடந்தது. பின்னர் பூஜைகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி