பரபரப்பு.. சோழவந்தான்: கோஷ்டி மோதல்; 5 பேர் கைது

மதுரை மாவட்டம் சோழவந்தான் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்த பீர் முகமதுவின் (42) மகன் ரபீக் ராஜா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த தீன் முகமது மகளை காதலித்து அவரது எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக பீர் முகமது, தீன் முகமது ஆகியோரின் குடும்பங்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில், தீன் முகமது மனைவி சாரா (52), மகன்கள் அப்பாஸ் (39), இஸ்கத் (20) உள்ளிட்டோர் பீர் முகமதுவின் வீட்டுக்குள் புகுந்து மோதலில் ஈடுபட்டனர். ரபீக் ராஜா, பீர் முகமது ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டனர். இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

இதுகுறித்து பீர் முகமது அளித்த புகாரின் பேரில், நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்து, சாரா, இவரது மகன்கள் அப்பாஸ், இஸ்கத் ஆகிய மூவரையும் சோழவந்தான் போலீசார் கைது செய்தனர். இதேபோல், சாரா அளித்த புகாரின் பேரில், பீர் முகமது, இவரது மனைவி அம்சத் ரோஜா ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி