மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அனுமதி அளித்துள்ளது. நிலம் கொடுத்த சின்ன உடைப்பு பகுதி மக்கள், தங்களின் மறுகுடியமர்வு தொடர்பாக எந்த திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை எனக் கூறி மனு தாக்கல் செய்திருந்தனர். தகுதியுள்ள நபர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து எழுத்துப்பூர்வமான அறிவிப்பை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.