ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு வரும் மே மாதத்தில் இடைக்கால தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர் உட்பட 35 மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 133 இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 315 காலிப் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.