விழுப்புரத்தில் உரக்கடத்தல் மற்றும் பதுக்கலைத் தடுக்க வேளாண் உதவி இயக்குநர் விஜயகுமார் திடீர் ஆய்வு நடத்தினார். உரங்களை அதிக விலைக்கு விற்றாலோ, பிற மாவட்டங்களுக்குக் கடத்தினாலோ கடும் நடவடிக்கை பாயும் என வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் எச்சரித்துள்ளார். கடைகளில் இருப்புப் பலகை வைக்கப்பட வேண்டும், பிஓஎஸ் (POS) கருவி மூலமே விற்க வேண்டும் என்றும், மீறினால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.