தமிழகத்தின் பெரும் அடையாளமாக திகழும் LIC கட்டிடம்

எல்.ஐ.சி கட்டிடம் தென்னிந்தியாவிலேயே முன்பு உயரமான கட்டிடம் என்றுகூடச் சொல்லலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னை வருபவர்கள் தவறாமல் வந்து கண்டு வியக்கும் இடமாகவும் இருந்துள்ளது. அண்ணாசாலையில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் 177 அடி உயரம் கொண்டது. எல்.ஐ.சி. கட்டிடம் 1959-ல் இன்சூரன்ஸ் சென்னைப் பிரிவின் தலைமையிடமாக ஆனது. இதற்குப் பிறகு பல உயரமான கட்டிடங்கள் கட்டப்பட்டாலும் இன்றும் தமிழகம் மற்றும் சென்னையின் அடையாளமாக திகழ்கிறது.

தொடர்புடைய செய்தி