லட்டு சர்ச்சை - முன்னாள் அமைச்சர் ரோஜா கோரிக்கை

திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து சிபிஐ விசாரணை தேவை என ஆந்திரா முன்னாள் அமைச்சர் ரோஜா கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவர், "திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும். உச்சநீதிமன்றம் தீவிரமாக விசாரித்தால், சந்திரபாபு நாயுடு ஏற்படுத்திய பொய் சர்ச்சை வெளியே வரும். உண்மை வெளி வந்தால், பொய் சொன்னவர்கள் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி