அரியானா நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், காங்கிரஸ் பிரமுகர் ராபர்ட் வதேராவுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் தனிநபர் பிணையில் இன்று (மே 16) ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் ஆஜரான அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.