வேப்பனப்பள்ளி அருகேயுள்ள வசந்தப்பள்ளி பகுதியில் கன்றுவிடும் திருவிழா நடைபெற்றது. இதில் பர்கூர், வேப்பனப்பள்ளி, கவரட்டனப்பள்ளி, மற்றும் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட கன்றுகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு கன்றும் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு, வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.