போச்சம்பள்ளி வாரச்சந்தையில் பூசணிக்காய் அமோக விற்பனை

வரும் தைப்பொங்கலை முன்னிட்டு போச்சம்பள்ளியில் வாரச்சந்தையில் பொன் நிறமான பூசணிக்காய் அமோக விற்பனை நடைபெற்றது. போச்சம்பள்ளி பகுதிகளில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் பொன் நிறமான பூசணிக்காய் விதை நடவு செய்யப்பட்டு தற்போது பூசணிக்காய்கள் முற்றிய நிலையில் உள்ளன. 

தற்போது அறுவடை செய்யும் நிலையில் இன்று நடந்த போச்சம்பள்ளி வாரச்சந்தையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பூசணிக்காய்களை கொண்டு வந்து விற்பனைக்குக் குவித்து வைத்துள்ளனர். மேலும் இன்று மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டது. அடுத்த வாரம் கூடுதல் விலைக்குப் போகும் என்ற கருத்தில் கொண்டு பொதுமக்கள் ஆர்வத்துடன் பூசணிக்காய் வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி