கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த விளங்காமுடி கிராமத்தில் உள்ள அருள்மிகு பூங்காவனத்தம்மன் ஆலயத்தில், மகா சிவராத்திரி மற்றும் மயானகொள்ளை திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு பூங்காவனத்தம்மன் சமித தாண்டேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத அம்மனுக்கும் சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.