கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி போலீசார் நாச்சிகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, லாட்டரி சீட்டு விற்ற ஈஸ்வரன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 50 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.