ராயக்கோட்டை: பேக்கரி கடைக்காரரை தாக்கியவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள பட்டிபாறையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (44). இவர் ராயக்கோட்டையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 9) இவருடைய கடைக்கு தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை சேர்ந்த டிரைவர் அழகு (29) என்பவர் வந்து 150 ரூபாய்க்கு தின்பண்ட பொருட்கள் வாங்கியுள்ளார். ஆனால் ரூ.100 மட்டுமே கொடுத்துள்ளார். 

இதனால் கோவிந்தராஜ் மீதி தொகையை கொடுக்குமாறு கூறினார். அழகு தர மறுத்ததால் அவர்களுக்குள் தகராறு வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அழகு கோவிந்தராஜை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி