கிருஷ்ணகிரி அருகே எலுமிச்சங்கிரியை சேர்ந்த வெங்கடேசனின் மனைவி லதா (51), கடந்த 6-ஆம் தேதி கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். மகராஜகடை போலீசார் லதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.