கிருஷ்ணகிரியில், கந்தசாமி (53) என்ற தனியார் பள்ளி ஆசிரியர், கடந்த 7-ஆம் தேதி அன்று பந்தாரப்பள்ளி அருகே ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குருபரப்பள்ளி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.