கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் சாலையில் பழைய பொருட்கள் கடை நடத்தி வரும் முத்தா(35) என்பவரை, கடந்த 25.02.2026 அன்று, தான் காவல்துறை பணியாளர் எனக்கூறி, போலியான துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய அடையாளம் தெரியாத நபர் குறித்து நல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. தனிப்படையினர் தேடி வந்த நிலையில், ஓசூர் அலசநத்தத்தைச் சேர்ந்த மனோஜ்(33) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.