கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பெட்டமுகிலாளம் அருகில் காமகிரி என்னும் கிராமத்தில் ஜோதி(20) என்ற பெண்ணுக்கு இரவு 12 மணிக்கு மேல் திடீரென பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆம்புலன்சில் அனிதா என்பவரால் பிரசவம் பார்க்கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது.