கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சூளகரை கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த மின்வாரிய ஊழியர் சுப்பிரமணி, நிலத்தை அளவிடச் சென்ற வட்டாட்சியர் ராஜலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.