கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவ அலுவலர் எழிலரசி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார். மேலும் பொதுமக்களிடம் காசநோய் குறித்த துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு செய்தார்கள். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவஊழியர்கள்பொதுமக்கள் எனபலர் கலந்துகொண்டனர்.