ஊத்தங்கரை: புது பெண் தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சென்னப்பநாயக்கனூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் மகாலதி (21). இவருக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தும்பல் பகுதியைச் சேர்ந்த குருநாதன் என்பவருக்கும் கடந்த 1 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் (டிச.14) பெற்றோர் வீட்டுக்கு வந்த மகாலதி திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார் மகாலதியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்தது தொடர்பாக ஊத்தங்கரை டி.எஸ்.பி. சீனிவாசன் விசாரணை நடத்தி வருகிறார்

தொடர்புடைய செய்தி