கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கல்லாவி ஊராட்சிக்கு உட்பட்ட பொது மக்கள் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மகளீர் உரிமை தொகை உள்ளிட்ட பல கோரிக்கை மனுக்களை வழங்கினர். இதில் ஒன்றிய செயலாளரும் மாவட்ட அறங்காவல் குழு தலைவருமான ரஜினி செல்வம், ஊத்தங்கரை தாசில்தார் மோகன்தாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.