கிருஷ்ணகிரி: லாரி ஏறி பெண்ணின் கால் நசுங்கி பலி; சிசிடிவி காட்சி

ஊத்தங்கரை நான்கு முனைச் சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியோர்கள் மீது டிப்பர் லாரி ஏறியதில் வயதான பெண்ணின் கால் நசுங்கி பலி. பதப்படைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனைச் சந்திப்பில் ஊத்தங்கரை அவ்வை நகரைச் சேர்ந்த ராகவன் (70) செல்வி (65) கணவன் மனைவியான இரு முதியோர்களும் ஊத்தங்கரை ஸ்டேட் பாங்க் எதிரில் பழக்கடை தொழில் செய்து வருகின்றனர். இன்று அவ்வை நகரில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஊத்தங்கரை நான்கு முனைச் சந்திப்பு வழியாக வரும்போது பின்னால் வந்த மண்ணு லோடு ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி முதியோர்கள் மீது மோதியதில் லாரியின் டயர் அந்தப் பெண் மீது ஏறியது. 

பிறகு அந்தப் பெண் கத்தி கதறிப்போகிறாள். மீண்டும் டிப்பர் லாரி பின்னால் வந்தபோது அந்தப் பெண்ணின் கால் மீது சரசரமாக ஏறி இறங்கியதில் கால் நசுங்கியது. உடனடியாக சாலை ஓரத்தில் இருந்து பொதுமக்கள் அவர்களை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி அப்பெண் இறந்துவிட்டாள். இதுசம்பந்தமாக அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ஊத்தங்கரை நகர பகுதிக்கு வரும் வாகனங்கள் மெதுவாக வர வேண்டும். மண் லாரிகள் ஊத்தங்கரைக்கு புறவழிச்சாலையில் வெளியே செல்ல வேண்டும். அப்போழுதுதான் விபத்துக்கள் குறைக்க முடியும் என கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி