கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சாமல்பட்டியில் நேற்று (ஜனவரி 4) மாலை கார் மற்றும் டூ வீலர் நேருக்கு நேர் மோதியதில் டூ வீலரில் சென்ற நபர் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணையில் நார்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.