இந்த நிலையில் காந்திஜி நூற்றாண்டு மண்டபம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது, இது டிரஸ்ட்டுக்கு சொந்தமானது எனக் கூறி காசிலிங்கம் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென காசிலிங்கம் மற்றும் சிலர் ஜேசிபி வாகனத்துடன் அத்துமீறி காந்திஜி நூற்றாண்டு மண்டபத்திற்குள் புகுந்து அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது,
அது தொடர்பாக காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் மாவட்டத் தலைவருமான எல். சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்து குமார் நகர தலைவர் தக்காளி தவமணி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் புகார் அளிக்க சென்றனர்,
அப்போது புகார் மனுவை வாங்காமல் காவல் ஆய்வாளர் சரவணன் காங்கிரஸ் நிர்வாகிகளையும் காங்கிரஸ் கட்சியினர்களையும் தகாத வார்த்தைகள் பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்சிக்கும் தமிழக முதல்வர் மற்றும் எஸ்.பி ஆகியோருக்கு புகார் மனுவினை அனுப்பியுள்ளார்.