இதனை அடுத்து திருமதி ராஜம்மாள் சண்முகம் ஆகியோரின் நினைவேந்தல் மற்றும் திரு உருவப் படம் திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே. வி. தங்கபாலு கலந்துக் கொண்டு ராஜம்மாள் மற்றும் சண்முகம் ஆகியோரின் திரு உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். பின்னர் தாயை இழந்து வாடும் குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவருமான எல். சுப்பிரமணியன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தவெக நிர்வாகி மீண்டும் மாமூல் வேட்டை.. நயினார் நாகேந்திரன் கண்டனம்