கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.