கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பாரக்கல் கொட்டாய் பகுதியில் நாட்டுத்துப்பாக்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கிராமத்தில் வசிக்கும் முனியப்பன் என்பவரின் வீட்டில் நாட்டு துப்பாக்கி இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, போலீசார் முனியப்பனை கைது செய்து, அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.