கிருஷ்ணகிரி: குழந்தையுடன் இளம்பெண் மாயம்

கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் தனசேகரன் (29) கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தீபா (22) இவர்களுக்கு அட்லீக் (3) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த செப்-24ம் தேதி அன்று மாலை தீபா குழந்தையுடன் வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு மீண்டும் வரவில்லை.

இதனால் அவரை பல இடங்களில் தேடியும் அவர்கள் இல்லாததால் இதுகுறித்து தனசேகரன் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் இதே பகுதியில் வசித்து வரும் தனியார் வங்கி ஊழியர் சிபிராஜ் (21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி