கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை யாரப் நகரைச் சேர்ந்த ராமன் என்பவரின் 20 வயது மகள், தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ராமன் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.