கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள பழையூர் பகுதியைச் சேர்ந்த மாதையன் (38) மற்றும் சின்னசாமி (52) ஆகிய விவசாயிகளுக்கு இடையே நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மோதல் ஏற்பட்டது. இது குறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி, மாதையன், சின்னசாமி உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.