நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் செந்தில் தலைமையில் கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் பஞ்சமி நில இடம் உள்ள பகுதிக்கு இன்று சென்றனர். அப்போது நிலத்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் பயன்பாட்டில் வைத்திருந்த கந்தசாமி மகன் சண்முகவேல், ரங்கசாமி மகன் ராமசாமி, ராஜன் மகள் செல்வி ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படும் என வட்டாட்சியர் கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
ஜனவரியில் ஜாக்பாட்.. வங்கிக்கணக்கிற்கு வருகிறது ரூ.4,000?