கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வைத்துள்ள பல தரப்பட்ட கொடிக் கம்பங்களை அதன் பொறுப்பாளர்கள் ஏப்ரல் 28-ம் தேதிக்குள் அகற்றபட வேண்டும் அவ்வாறு அகற்றாத கொடிக் கம்பங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய அறிவிப்புகள் அளித்து, அதன் பிறகு அகற்ற வேண்டும். அகற்றுவதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் வசூலித்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.