கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீசார் பூனப்பள்ளி சோதனைச்சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சென்ற நபரை நிறுத்தி சோதனையிட்ட போது அவரிடம் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த அசோக் (22) என்பதும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.