கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கீழ்காங்கேயன் குப்பத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (29) இவர் ஓசூர் சதாசிவம் காலனியில் பகுதியில் குடியிருந்து வருகிறார். நேற்று முன்தினம் (செப்-29ம்) தேதி அன்று காலை ஓசூரில் அவர் வசித்து வந்த வீட்டில் பிணமாக கிடந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த வந்த அட்கோ போலீசார் ராஜ்குமார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.