கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கௌவரப்பள்ளி அணையிலிருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாயின் பழுதடைந்த கட்ட அமைப்புகளை புனரமைப்பு செய்வதற்கான பணிகள், சுமார் 9 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பில் நீர்வளத்துறை சார்பில் இன்று தொடங்கின. ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ தலைமையில் பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.